நாகப்பட்டினம், பிப்.28 - நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கு வளை மற்றும் கீழ்வேளூரில் அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. இதில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பங்கேற்றார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட் பட்ட திருக்குவளை ஊராட்சியில் ஒருங் கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத் தார். இதையொட்டி, திருக்குவளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, திருக்குவளை ஊராட்சி மன்றத் தலை வர் எல்.பழனியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுதா அருணகிரி, டி. செல்வம், மேலவழக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் தனபாலன் ஆகி யோர் பங்கேற்றனர். கீழ்வேளூர் பேரூராட்சியில், நாகப் பட்டினம் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை முழுநேர நியாய விலைக் கடை புதிய கட்டிடத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் இரா. பேபி, கீழ்வேளூர் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.கோவிந்த ராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் கா. பழனியப்பன், பேரூராட்சித் தலைவர் இந்திராகாந்தி சேகர், பேரூராட்சி செயலாளர் குகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.