கரூர், மார்ச் 27 - கரூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி மீண்டும் போட்டியிடுவதையடுத்து, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு உணவுத்துறை அமைச் சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநிலங்களவை உறுப்பினர் எம்.அப்துல்லா ஆகியோர் தலைமை வகித்து பணிமனையை திறந்து வைத்த னர். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவ காமசுந்தரி, காங்கிரஸ் கட்சியின் முன் னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, கரூர் காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். ஸ்டீபன்பாபு, திமுக மாநகரச் செய லாளர் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செய லாளர்கள் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2019 முதல் மக்களவை உறுப்பி னராக இருந்து, கரூர் தொகுதிக்குட் பட்ட ஆறு தொகுதிகளிலும் மக்களை சந்தித்து, மக்களின் குறைகளை கேட்ட றிந்து அவற்றை நிறைவேற்றி கொடுத் துள்ளார் வேட்பாளர் ஜோதிமணி. காங்கிரஸ் கட்சி அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கு வோம் என ராகுல்காந்தியும், தமிழக முதல்வரும் அறிவித்துள்ளனர். ஆனால் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு மக்களை வஞ்சிக்கிறது. மாநில அரசு ரூ.1 வரி செலுத்தினால், ஒன்றிய அரசு 20 பைசாதான் திருப்பி வழங்குகிறது. ஆனால் பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங் களுக்கு தேவைப்படும் நிதியை அள்ளிக் கொடுக்கிறார்கள். நமக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை. 2019 தேர்தலில் 39 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது போல, இந்தத் தேர்தலிலும் புதுவை, தமிழ கம் உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றார்.