districts

img

ஊரணிபுரத்தில் கட்டுமான சங்க நலவாரிய பதிவு மையம் திறப்பு

தஞ்சாவூர், ஜன.15 - தஞ்சை மாவட்ட கட்டுமானத் தொழிலா ளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சுமார் ஒரு  லட்சம் ரூபாய் மதிப்பிலான நலவாரிய கணினி  மையம், ஊரணிபுரம் கிளை சார்பில் திறந்து  வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா,  ஊரணிபுரத்தில் மாட்டுப் பொங்கல் தினத் தன்று, சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் நலவாரிய பதிவு மையம் திறப்பு  விழா கட்டுமான சங்க தஞ்சை மாவட்டத் தலை வர் சின்னையன் தலைமையில் நடைபெற் றது. கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தி னார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் நலவாரிய மையத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்வில் முறைசாரா சங்க மாவட்ட  செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீனி, நிர்வாகிகள்  கோவிந்தராசு, பாஸ்கர், திருச்சிற்றம்பலம் ராஜி, மாட்டுவண்டி சங்க நிர்வாகிகள் செல்வம், வெங்கரை திருப்பதி, ஆட்டோ சங்கர், நிர்வாகி  பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.