தஞ்சாவூர், மார்ச் 16 - தஞ்சாவூர் ஒன்றியம் மாரியம்மன் கோவில் ஊராட்சி, புளியந்தோப்பு கிரா மத்தில் நீர்வளத்துறை சார்பில் ரூ.8.84 கோடி மதிப்பில் சமுத்திரம் ஏரி புனரமைக்கப்பட்டு, அமைக்கப் பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக் கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப் பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவை யாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சு கம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், ஒன்றியக் குழு உறுப்பினர் கவிதா குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லணைக் கால்வாய் பாசன அமைப்பில் உள்ள சமுத்திரம் ஏரி, தஞ்சாவூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் அமைந் துள்ளது. இந்த ஏரியின் மூலம் 6 கிரா மங்களில் உள்ள 1,116 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஏரியை ஆழப் படுத்தி, கரையை பலப்படுத்தி, பாசன கட்டுமானங்களை புனரமைத்து, சிறு வர் பூங்கா மற்றும் நடைபாதை அமைக் கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற் போது முழுமையாக முடிவடைந்து உள்ளன. இவ்வாண்டு சமுத்திரம் ஏரியின் மூலம் 1,116 ஏக்கர் பாசன பரப்பில் இரு போக சாகுபடி ஈட்டப்பட்டுள்ளது. மேலும், தற்போது 30 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. இந்த கோடை காலத்தில் கால்நடைகள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நீர் போது மானதாகும் என அமைச்சர் தெரி வித்தார்.