கடலூர், ஆக. 21- கடலூர் அக்கரை கோரி மீன் இறங்குத்தளத்தை சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் மேயர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். கடலூர் அக்கரை கோரி மீனவ கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தினந்தோறும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதால் அப்பகுதியில் மீன் இறங்கு தளம் இல்லா மல் மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நிழலில் அமர்ந்து வலை களை பின்னவும், மீன்கள் உலர்த்தவும், சுகாதார மான முறையில் மீன்களை கையாளவும் ரூ.4.5 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகி யோர் மீனவர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.