மன்னார்குடி, ஜன.27- ஜன 27 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரரும் அசாத்திய நெஞ்சுரம் கொண்ட சேரன்குளம் ஆர்யா என்கின்ற பாஷ்யம் அவர்களது நினைவு சின்னம் திறப்பு விழா மற்றும் “கோட்டை யில் கொடியேற்றிய பாஷ்யம்” நூல் வெளியீட்டு விழா சேரன்குளத்தில் நடைபெற்றது. மன்னார்குடி ஒன்றியக்குழுதலைவர் சேரன்குளம் மனோ கரன் தலைமையேற்று நினைவு சின்னத்தை திறந்து வைத்தார்.சேரன் குளம் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா மனோகரன் நினைவு சின்னம் கொடி மரத்தின் குடியரசுதினவிழா தேசியக் கொடியேற்றினார். அறிவொளி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா. இயேசுதாஸ் எழுதிய “கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்” நூலை மாவட்ட கல்வி அலு வலர் இரா.மணிவண்ணன் நூலை வெளியிட்டார். தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் கவிஞர்களப்பிரன், மாநில செயற்குழு உறுப்பினர் வெ .தே வதாசன், மாவட்ட தலைவர் இரா.தாமோதரன், கலை இலக்கிய பெரு மன்றகிளை செயலாளர் க.தங்கபாபு, அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் யு.எஸ். ஆன்லைன்.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நிர்வாகிகள், சேரன்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணை தலை வர் மணிமேகலை சுப்ரமணியன், மாநிலசெயற்குழு உறுப்பினர் வ.சேது ராமன், தலைமை ஆசிரியர் ஜி.ஆனந்தி, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பி னர் கே.பிச்சைக்கண்ணு, ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், சேரன்குளம் பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்ன தாக வீ.முருகதாஸ் அனைவரும் வரவேற்றார். நிறைவாக கவிஞர் சரசுவதி தாயுமானவன் நன்றி கூறினார்.