புதுக்கோட்டை, ஆக.2 -
வரலாற்றை சரியாக வாசித்தால் மட்டுமே இந்தியாவைப் பற்றி முழு மையாக புரிந்துகொள்ள முடியும் என எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.
புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் செவ்வாய்க்கிழமை ‘வாசிப்பின் சிறகுகள்’ என்ற தலைப் பில் அவர் பேசுகையில், “இளை ஞர்கள் படிப்பதில்லை என பெரிய வர்கள் நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் பெரிய வர்களும் படிப்பதில்லை, ஆசிரி யர்கள், பேராசிரியர்கள் படிப்ப தில்லை. ஆனால், அதிகாரம் செலுத் தும் நோக்கில் இளைஞர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். பொதுவாக எல்லா தரப்பிலும் வாசிப்பு குறைந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக் கத்தைத் தொடங்கியிருப்பது நல் லது. எங்களைப் போன்ற எழுத்தா ளர்களை வைத்து முதல்கட்டமாக 53 நூல்கள் வெளியிடப்பட்டு இருக் கின்றன. கல்வித்துறையின் இத்த கைய நடவடிக்கையால், 5 ஆண்டு களுக்குப் பிறகு இதற்கான விளைச் சல் கிடைக்கலாம்.
மாணவர்களைப் போல ஆசிரி யர்களும் பாடப் புத்தகங்களைத் தான் படிக்கின்றனர். பாடப் புத்த கங்கள் ஆசிரியர்களுக்கானது அல்ல. அவர்கள் மேலும் பல நூல் களைக் கற்று மாணவர்களை வழி நடத்த வேண்டும். சமூகத்துக்கான சிறந்த மனிதர்களை கல்விக் கூடங் கள் உருவாக்குவதில்லை. சமூகத் துக்கும் கல்விக் கூடத்துக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. வாசிப்பு ஒன்றே இதைக் குறைக் கும்.
மாணவர்களின் தலையில் எதை யாவது திணித்து அனுப்பும் வேலை யைத்தான் கல்விக் கூடங்கள் செய் கின்றன. உண்மை அப்படியல்ல. மாணவர்கள் படைப்பூக்கம் மிக்க வர்கள். குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலையில் இருந்து ஆசிரியர்கள் விடுபட வேண்டும்.
வகுப்பறை வெளிச்சம் ஊருக்குள் பரவ வேண்டும்
அறிவு என்பது வெளிச்சம். சாதி என்பது இருட்டு. வகுப்பறையில் இருந்து வெளிச்சம் ஊருக்குள் பரவ வேண்டும். ஆனால், ஊருக் குள் இருந்த இருட்டு வகுப்ப றைக்குள்ளும் வந்திருக்கிறது. சாதிப் பட்டையைக் கட்டிக் கொண்டு, ஆசி ரியரை தாக்கச் செல்லும் மாண வர்கள் உருவாகியிருக்கிறார்கள். கல்வித் துறையில் ஆசிரியர்களுக் கான கம்பீரம் சிதைக்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறையில் செயலர் முதற்கொண்டு அதிகாரிகளுக்கு கீழே பணியாற்றும் கடைநிலை ஊழி யர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதில் மாற்றம் வரவேண்டும்.
நூறு புத்தகங்களைப் படித்தால் நமக்கு சிறகுகள் முளைக்கும். ஆயி ரம் புத்தகங்களைப் படித்தால் அறி வுலகின் விண்ணில் பறக்க முடியும். சரியான கல்வி என்பது சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்ப்பதுதான். காரல் மார்க்சும், அம்பேத்கரும், பெரி யாரும் சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்த்தவர்கள். நல்ல வாசிப்பே சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்க்க நமக்கு உதவும்.
தனித்து இயங்கும் மொழி யாக தமிழ் இருக்கிறது என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட அக ழாய்வுகள் நமக்கு உணர்த்து கின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள அணிகலன்களும், பெயர்களும் கீழடியில் கிடைத்து இருக்கின்றன. அதற்காக ஆதிமனிதனே தமிழன் தான் என்ற மிகையும் நமக்குத் தேவையில்லை. அறிவியல்ப் பூர்வ மாக உறுதி செய்யப்பட்டவற்றைக் கொண்டு நம்முடைய பெருமை களைக் கொண்டாடுவோம்.
ஆதிமனிதன் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா. அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள்தான் உலகில் உள்ள அத்தனை மனித சமூகமும். சிந்து சமவெளி நாகரிகத்தின் வாரிசு கள், தமிழர்கள் என நிரூபணமாகி வருகிறது. வரலாற்றை சரியாக வாசித்தால் இந்தியாவைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடி யும்” என்றார்.