districts

ஐராவதீஸ்வரர் கோவில் பூங்காவிற்கு நவீன மின்னொளி வழங்கிய ஓஎன்ஜிசி

மன்னார்குடி, மார்ச் 26 - யுனெஸ்கோ நிறுவனத் தால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப் பட்டு இந்திய தொல்பொருள்  ஆய்வுத் துறையின் கட்டுப் பாட்டில் தாராசுரம் ஐராவ தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கும் இதனை  சுற்றிலும் உள்ள பூங்கா விற்கும் நவீன மின்னொளி வசதியை ரூ.13 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி மாநக ராட்சி மேயர் சரவணன், துணைமேயர் தமிழழகன் ஆகியோர் தலைமையிலும், ஓ.என்.ஜி.சி நிறுவன மேலாளர் மாறன், உதவி மேலாளர் அனுராக் ஆகி யோர் முன்னிலையிலும் நடை பெற்றது. கே.எம்.பி.எப் தலை வர் கல்யாணசுந்தரம் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள நவீன  மின் விளக்குகளை ஒளியூட்டி  வைத்தார்.