districts

img

ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது!

அரியலூர், ஜன.24 - அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகை யில், “அரியலூர் மாவட்டத்தில் சம்பா  நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது.  எனவே, தேவைப்படும் கிராமங்க ளில் நெல் கொள்முதல் நிலையங் களை திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். கொள்முதல் நிலையங்க ளில் மூட்டைக்கு ரூ.10-க்கு மேல் வசூலிக்க  கூடாது என உத்தரவிட வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. அரியலூர்- ஜெயங்கொண்டம் வழி யாக விருத்தாசலத்துக்கு ரயில் பாதை அமைத்து ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏரி, வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு புதிய தர மான விதைகளை வழங்க வேண்டும். பயிர்களுக்கான காப்பீட்டுத் தொ கையை அரசே ஏற்று வழங்க வேண்டும்.  புதிய வகையான நெல் அறுவடை, வைக்கோல் கட்டும் இயந்திரங்களை அரியலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரவேண்டும்” என்றனர். திருமானூரை அடுத்த கீழக்காவட் டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள், போதிய  மழை இல்லாததால், குறைந்த மாதங் களில் விளைச்சலுக்கு வரும் சன்ன ரக மான அம்மன் பொன்னி என்ற நெல்பயிரை  தங்கள் வயலில் சாகுபடி செய்தனர். ஆனால், நடவு செய்யப்பட்ட 20  நாள்களில் பயிர்கள் கதிர் வந்துவிட்டன.  மேலும், பயிர்கள் போதிய வளர்ச்சி யும் அடையவில்லை. இவை ஏக்கருக்கு  அதிகபட்சமாக 5 மூட்டைகள் கிடைப் பதே கடினம். இந்த ரக நெல்லை அப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசா யிகள் பயிரிட்டுள்ளனர். எனவே, விதை  நிறுவனம் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீட்டு தொகையை  பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி  மனு அளித்தனர்.