விழுப்புரம், பிப்.29- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே புதுச்சேரி மது பானம் கடத்தி வந்த ஒருவரை போலீசார் கைது செய்து மதுபான கடத்திவந்த சூரியா என்ற இளை ஞரை கைது செய்தனர். விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் விக்கிரவாண்டி பெரிய காலனி, அம்பேத்கர் சிலை அருகே வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் வானூர் வட்டம், வாழப்பட்டாம் பாளையம், கலைஞர் நகரைச்சேர்ந்த சூர்யா (27) என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2794 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த னர்.