தஞ்சாவூர், ஆக.29 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.கே சி.பி.எஸ்.இ வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இவ்விழாவை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கேரளத்தின் பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனம் நடைபெற்றது. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட் டன. மாணவர்களின் கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. ஆசிரியர் நிஷாந்தினி ஓணம் பண்டிகை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர்பிச்சை, அறக் கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.