புதுக்கோட்டை, பிப்.3 - உலக ஈரநில தினத்தை யொட்டி புதுக்கோட்டை கவி நாடு கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ் ச்சியில், மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாண வர்கள் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் சோ.கணே சலிங்கம் இப்பணியைத் தொடங்கி வைத்து, ஈரநில பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார். தேசிய பசு மைப்படை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ச.ரெங்கராஜு, பள்ளியின் தலைமை ஆசிரி யர் ப.வள்ளுவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடை பெற்ற இப்பணியில், சுமார் 100 கிலோ எடையில் 7 மூட்டை களில் பிளாஸ்டிக் கழிவுகள் கண் மாயில் இருந்து எடுக்கப்பட்டு, 9-ஏ நத்தம் பண்ணை ஊராட்சி அலுவலகத்தில் ஒப்ப டைக்கப்பட்டன. புதுக்கோட்டை வனச் சரக அலுவலர் எம்.சதாசிவம், திருமயம் வனச் சரக அலுவலர் எம்.குமார், தோப்புக்கொல்லை வனவிரி வாக்க வனச்சரக அலுவலர் கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.