கும்பகோணம், ஏப்.24
தஞ்சை மாவட்டம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க குடந்தை வட்டக்கிளை மற் றும் பாரதிபுத்தகாலயம் இணைந்து உலக புத்தக தின சிறப்பு நிகழ்ச்சிகள் கும்ப கோணம் ரயிலடி எதிரில் உள்ள பாரதி புத்தகாலயத் தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஆர்.இராஜ கோபாலன் தலைமை வகித் தார். கே.பக்கிரிசாமி வர வேற்றார். கும்பகோணம் தமுஎகச கிளை செயலாளர் கா.அசோக்குமார், ஆசிரியர் மா.சுதா ஆகியோர் நூலை அறிமுகப்படுத்திப் பேசினர்.
நிகழ்வில், குடந்தை மாநகரக் கிளை பொறுப்பா ளர் குடந்தை சுதா மாணிக் கம் எழுதிய ‘எல்லாவற்றி லும் தொடரும்’ என்னும் கவி தைத் தொகுப்பை மாவட்டத் தலைவர் கவிஞர் ஜீவபாரதி வெளியிட, மாநகரத் தலை வர் மா.கலைச்செல்வன் பெற் றுக்கொண்டார்.
மன்னார்குடி
இதேபோல், தமுஎகச மன்னார்குடி கிளை சார்பில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயண னைப் பற்றிய கட்டுரை வாசிப்பு நிகழ்வு கிளைத் தலைவர் கே.வி.பாஸ்கரன் தலைமை யில் நடைபெற்றது. இதில், மூத்த தோழர் ஜி.ரகுபதி கி.ரா-வைப் பற்றிய கட்டுரை களை வாசித்தார். மே மாதத் தில் நடைபெறவிருக்கும் கலை இரவு அமைப்புக் குழுச் செயலாளர் கே.பிச் சைக் கண்ணு, சிபிஎம் நக ரச் செயலாளர் ஜி.தாயுமான வன், ஜி.முத்துக்கிருஷ் ணன், ஜி.மாரிமுத்து, டி. சந்திரா, நீடாசுப்பையா, கே.டி. கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். எழுத்தாளன் சொன்ன கட்டுக் கதைகள், நசீபு, மேழி நகரும் தடம் ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நூல்களை மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவ ணன் அறிமுகம் செய்து பேசி னார்.
துரைக்குமரன், கஸ் தூரி ரங்கன்,கவிபாலா ஆகி யோர் விமர்சன உரை ஆற்றி னர். நூலாசிரியர்கள் புதுகை சஞ்சீவி, அராபத் உமர், நந் தன் கனகராஜ் ஏற்புரை வழங்கினர். கவிச்சுடர் கவி தைப் பித்தன் உலகப் புத்த கத் தின சிறப்புரையாற்றி னார். புதுகை புதல்வன் வர வேற்க, மாவட்டப் பொருளா ளர் ஜெயபாலன் நன்றி கூறி னார்.