பேராவூரணி, டிச.8- கிழக்கு கடற்கரை சாலை யின் இருபுறமும் படர்ந்து கிடக்கும் கருவேலஞ்செடி களைவெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி கட்டு மாவடி வரை சுமார் 55 கி.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த கிழக்கு கடற் கரை சாலை சென்னை - கன்னியாகுமரியை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தஞ்சை மாவட்ட எல்லைக்குள், இந்த வழி யில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மனோரா சுற்றுலாத்தலம், சேதுபா வாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் மீன் பிடித் துறைமுகங்கள் உள்ளன. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக் கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இச்சாலை யின் இருபுறமும் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கிறது. இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் படர்ந்து கிடப்பதால், கனரக வாக னங்கள் வரும்போது, சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடி யாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத் துகள் ஏற்படுகின்றன. மேலும், கரு வேலமுள் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்ணில் பட்டு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வளைவுகளில் எதிரே வரும் வாக னங்கள் தெரியாத அளவிற்கு கருவேல மரங்கள் புதர்போல் மண்டிக் கிடக்கிறது. எனவே விபத்தை தடுப்பதற்கு, கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களையும், சாலை யில் படர்ந்து கிடக்கும் கிளைகளையும் வெட்டி அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதிப் படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.