districts

img

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம்

சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ.300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 18 ஆவது நாளான சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொட்டை அடித்துக் கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் காசிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.