districts

img

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 19-

    திருச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற உற்  பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கி ணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி யினை திங்களன்று துவங்கி வைத்து உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.  

     இந்தநிகழ்ச்சியில், மற்றொரு முக்கிய அம்சமாக ஓரிட சேவை மையத்தின் ‘மதி சிறகுகள்’ இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த மையமானது ஊரகத் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்குவதுடன் அவர்களின் தொழில் வெற்றிக்குத் துணைநிற்கும்.  

     மற்றுமொரு முக்கிய நிகழ்வாக விகேபி  திட்டப் பயனாளர்களின் ஊக்கமிகு வெற்றிக்கதைகள் அடங்கிய வெற்றிக் கதைப் புத்தகத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் விகேபி திட்டம் ஏற்படுத்திய தொழில் வளமாற்றத்தை பதிவுசெய்துள்ளதுடன், பயனாளர்களின் அரப்பணிப்பு, தொழில் வெற்றிகள், நிலையான முயற்சிகள் மற்றும் அவர்களின் மேம்பாடுகள் குறித்த அனைத்துப் பதிவுகளையும் கொண்டுள்ளது.

      இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்  தில்குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷனி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட  முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா,  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகி யோர் பேசினர்.

   நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழ கன், மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன், வேளாண் தொழில்நுட்ப வல்லு நர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள், மண்டலத் தலைவர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.