தஞ்சாவூர், ஜூன் 19-
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் முதல் வட்டப் பேரவை, பேராவூரணி பெரியார் அம்பேத் கர் நூலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டத் தலைவர் கணே. மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி த.சந்திரமோகன் துவக்கி வைத் தார். வட்ட இணைச் செயலாளர் க.மாணிக் கம் வரவேற்றார்.
வி.சண்முகம் சங்கக் கொடியேற்றி னார். மாவட்ட துணைத் தலைவர் கோ. பூபதி, மாவட்ட இணைச் செயலாளர் சி. பிச்சை முத்து ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர் இர.கலியமூர்த்தி, மாவட்டத் தணிக்கையாளர் பொ.சமு தாக்கனி, வட்டத் தலைவர் ஏ.நாகூரான், வட்டப் பொருளாளர் மா.ஆவிடைக்குட்டி, ஒருங்கிணைப்பாளர் வி.அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலாளர் சி.மணிவண்ணன் நன்றி கூறினார்.
பேரவையில், தேர்தல் கால வாக்குறு திப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட் டத்தை கொண்டு வர வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வெளிப்படை தன்மை யுடனும், அனைத்து மருத்துவமனைகளி லும் கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.