districts

img

மணல் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள்

திருச்சி ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? திருச்சிராப்பள்ளி, அக்.24 - உப்பிலியபுரம் அருகே மணல் கடத்த லின் போது வருவாய்த்துறை, போலீசார்  இணைந்து பறிமுதல் செய்த சுமார் 20  யூனிட் மணலை மர்மநபர் ஒருவர் திருடிச்  சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, உப்பிலியபுரம் அருகே த.மங்கப்பட்டி புதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் கடத்தப்பட்டது. இந்த மணல், தனியாருக்கு சொந்தமான இடத்தை ஸ்டாக் பாயிண்ட்டாக பயன்படுத்தி, திருட் டுத்தனமாக விற்பனை நடந்து வந்தது.  இதுகுறித்து தம்மம்பட்டி லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர், துறையூர் வரு வாய்த் துறையினர் மற்றும் உப்பிலிய புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த லாரிகளையும், மணல்  அள்ள ஸ்டாக் பாயிண்டிற்கு வந்த லாரி களையும் உப்பிலியபுரம் போலீசார் உதவி யுடன் துறையூர் வருவாய்த் துறையினர் மடக்கிப் பிடித்து  மணலை பறிமுதல் செய்தனர்.  சுமார் 25 யூனிட் மணலை தாலுகா  அலுவலகத்திற்கோ, காவல் நிலையத்திற் கோ எடுத்துச் செல்லாமல் அங்கேயே வைத்து பராமரித்தனர்.  புகார் தெரிவித்தவருக்கு தொலைபேசியில் மிரட்டல் இந்நிலையில், மங்கப்பட்டி புதூர் பகுதியில் வருவாய்த் துறையினர் பறி முதல் செய்து வைத்திருந்த மணலை, கடந்த அக்.19 அன்று இரவு தளுகை அருகே மலையாளபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஜேசிபி, டிப்பர் மூலம்  சுமார் 20 யூனிட் வரை மணலை திருடிச்  சென்றதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன் சிலர் முத்துக்குமாரிடம் கூறினர். உடனே  முத்துக்குமார், துறையூர் தாசில்தார் வன ஜாவுக்கு தகவல் தெரிவிக்க போனில் தொடர்பு கொண்ட போது, குரல் சரியாக  கேட்கவில்லை என்றும், நாளை தொடர்பு  கொள்வதாக கூறியும் போனை வைத்து விட்டாராம். பின்னர், அடுத்த 10 நிமிடத்தில் மணலை கடத்திய சுப்பிரமணி, கவுன்சிலர்  முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் மணல் விவகாரத்தில்  குடைச்சல் கொடுப்பதாக தாலுகா அலு வலகத்தில் இருந்து சொல்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடும்படி’ கூறியு உள்ளார்.  விவசாயிகள் சங்கம் சுவரொட்டி இதனால் அதிர்ச்சியடைந்த முத்துக் குமார், இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு  சென்றார். அதன்பின் “வருவாய்த்துறை கைப்பற்றி வைத்திருந்த மணலை திருடிய வர்கள் மீதும், கனிமவள கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு துணை போகும் அதி காரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சி லர் முத்துகுமார்  செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருவாய்த் துறையால் மீட்கப்பட்ட திருட்டு மணல், மீண்டும் திருடு போன சம்பவம் குறித்து விஏஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவிக் கையில், மணலை  மீண்டும் கொண்டு வந்து அதே இடத்தில் கொட்டச் சொல்லி யுள்ளோம் என்கின்றனர்.  மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது  உரிய வழக்குப் பதிந்து, மணலை திருட  பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்யாமல், இவ்வாறு பதிலளிப்பது அதி காரிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி பலகட்ட போராட் டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். முதற் கட்டமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி யுள்ளோம்” என்றார்.