districts

img

நிபந்தனையின்றி நூறு நாள் வேலை வழங்குக! விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 16 - திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் மேற்கு ஒன்றியம் திருப்பைஞ்சீலி ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மால்பாளையம், மூவராயன்பாளையம், தெற்கிஊர் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர், சாலை வசதி, மயானத்திற்கு மின்சாரம், தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை உடனே செய்து தர வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் ஜாப் கார்டு  பெறுவதற்கு வீட்டுவரி, தண்ணீர் வரி செலுத்த  நிர்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருப் பஞ்ஞீலி ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  பேராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நல்லய் யன் தலைமை வகித்தார். போராட்டத்தை சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன்  துவக்கி வைத்தார். சங்க மாவட்டத் தலைவர்  ஜெ.சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றிய செய லாளர் மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகே சன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றியப் பொருளா ளர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் அ.பழநி சாமி பேசினார்.  பின்னர் காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில், மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  தலைமையில் ஊராட்சி அலுவலகத் தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடை பெற்றது.   பேச்சுவார்த்தையில், அனைத்து கோரிக் கைகளையும் 3 மாத கால அவகாசத்தில் நிறைவேற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் நிபந்தனையின்றி நூறு நாள் வேலை  உடனடியாக வழங்கவும் உறுதியளிக்கப்பட் டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் கை விடப்பட்டது.