தஞ்சாவூர், நவ.5- தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபா வளி பண்டிகை செலவுகளை ஈடு செய்யும் வகையில், ரூ. 5,500 போனஸ் வழங்க வேண்டும். நவ.12 அன்று தீபாவளி பண்டிகை வருவ தால் இம்மாத ஊதியத்தை முன்னதாகவே வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், தமிழக முதலமைச்ச ருக்கு கடிதம் எழுதும் இயக்கம் நடை பெற்றது. இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மக்களைத் தேடி மருத்துவ திட்ட மாவட்ட செயலாளர் சாய்சித்ரா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, ஆட்டோ சங்கம் மாநகரச் செயலா ளர் ராஜா மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.