திருவாரூர், அக்.18 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நன்னி லம் ஒன்றியத் தலைவர் எம்.ராமமூர்த்தி மற்றும் குத்தகை சாகுபடி விவசாயிகள் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத் துக்குட்பட்ட சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல்வேறு விவசாயிகள் குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக திருக்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் ஏக்கருக்கு இத்தனை கலம் என்ற கணக்கில் 50 ஆண்டுகளாக குத்தகை செலுத்தி வந்துள்ளனர். கோவில் நிர்வாகம் குத்தகையை கிலோ கணக்கில் வரவு வைத்து வந்துள்ளது. இத னால் குத்தகையில் பாக்கி இருப்பதாக கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி யிருந்தது. மேலும் இது தொடர்பாக வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வரு கிறது. இந்நிலையில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடப்பாண்டுக் கான சிட்டா வழங்க கோயில் நிர்வாகம் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிட்டா வழங்க மறுக்கின்றனர். இதனால் விவசாயக் கடன் பெறவோ, பயிர் காப்பீடு செய்யவோ முடியாமல் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியத் தலைவர் எம்.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் ஆகியோரி டம் முறையிட்டனர். இதையொட்டி, பாதிக்கப்பட்ட விவசாயி களுடன் நன்னிலம் வட்டாட்சியர் சு.செந்தில் குமாரை நேரில் சந்தித்து, ஒன்றியத் தலைவர் எம்.ராமமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப் பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர் வரத. வசந்தபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.