கவிஞர் தங்கம் மூர்த்தி புகழாரம்
புதுக்கோட்டை, ஏப்.22 -
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியா வின் முகமாக அம்பேத்கர் திகழ்கிறார் என்றார் கவிஞர் தங்கம் மூர்த்தி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கில் ‘அம்பேத்கரும் அரசியல் சட்டமும்’ என்ற தலைப்பில் அவர் பேசுகையில்,
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் குழுவில் ஒருவராக அம்பேத்கர் இருந்த போதும், அவர் ஒரு வராகவே சட்டத்தின் முழு வடிவத்தை யும் உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மட்டுமல்லாமல், மொத்த இந்தியாவின் முகமாக அம்பேத் கர் இன்றும் காட்சி தருகிறார். இந்தி யாவில் பிறந்த அனைத்து மக்களும் சமம் என்பதை அடிநாதமாக அரசியல மைப்புச் சட்டத்தில் கொண்டு வந்தார்.
ஒரு குளத்தில் குடிநீர் எடுத்ததற் காக அந்தக் குளம் தீட்டுபட்டுவிட்டதாக அவரை புறக்கணித்தார்கள். பரோடா மன்னர் வெறும் ரூ. 25 கொடுத்து வெளிநாட்டில் படிக்க அனுப்பி வைத் தார். வெளிநாட்டு அறிஞர்கள் பலரும் அம்பேத்கரை பெரும் அறிஞராகப் பார்த்தனர். அறிவின் குரலாக தன்னை நிரூபித்தவர் அம்பேத்கர்” என்றார்.
கருத்தரங்குக்கு கிளைத் தலை வர் அ.மணிமேகலை ஜெயராமன் தலைமை வகித்தார். ‘அம்பேத்கரின் கல்வி’ என்ற தலைப்பில் மருத்துவர் ம. மணிமலர், ‘அம்பேத்கரும் பெண் உரி மையும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பி.அனிதா ராணி ஆகியோர் பேசினர். தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி. பன்னீர்செல்வன், மாவட்டச் செயலர் எம்.ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி. ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கிளைச் செயலர் சீ. சாந்தி நாகமுத்து வரவேற்றார். மருத்து வர் த.ரஞ்சனி நன்றி கூறினார்.