districts

img

சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை அமைக்க எதிர்ப்பு

அரியலூர், மார்ச் 7 - ஆண்டிமடம் அருகே சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய தார் சாலை பணிகளை துவக்க வேண்டும் என பல முறை மனுக் கள் அனைத்தும் நடவடிக்கை எடுக்காத தால், அக்கிராமமக்கள் திரண்டு ஊராட்சித் தலைவரிடம் வாயை பொத்திக்கொண்டு நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொடுக்கூர் ஊராட்சியில் குடிகாடு கிராமம் உள்ளது. இங்கு ஆயி ரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இக்கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் நபார்டு திட் டத்தின்கீழ் புதிதாக தார்ச்சாலை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையின் நடுவே 10-க்கும் மேற் பட்ட மின் கம்பங்கள் உள்ளன. தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதையறிந்த அக்கிராம மக்கள் சாலை யின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய தார்ச் சாலையை  அமைக்க வேண்டுமென ஊராட்சி நிர்வா கத்திற்கும், சாலை ஒப்பந்ததாரருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல், சாலையில் நடுவே உள்ள மின்கம் பத்துடன் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு, கொடுக்கூர் ஊராட்சி அலுவலகத்தில் வாயை மூடிக்கொண்டு நூதன முறையில் மனு அளித்தனர்.  இதுகுறித்து கிராம மக்கள் தெரி விக்கையில், “கடந்த 30 ஆண்டுகளாக சாலையின் நடுவே உள்ள மின் கம்பங் கள் அகற்றப்படாமல் இருக்கின்றன. தற்போது புதிய தார்ச் சாலை பணிகளை, சாலையின் நடுவே உள்ள மின் கம்பங் களை அகற்றாமலே செய்து வருகின்றனர். இதனால் அதிக அளவில் விபத்து ஏற்படும்” என்றனர்.