districts

img

சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.31 - காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புத னன்று மடியேந்தி போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ப.சத்தியவாணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.சாந்தி முன்னிலை வகித்தார்.  போராட்டத்தை விளக்கி மாவட்டச் செய லாளர் ஐ.அல்போன்ஸா, மாநில துணைத் தலைவர் ஆர்.பெரியசாமி ஆகியோர் பேசி னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி  மாவட்டத் தலைவர் முனைவர் கா.பால் பாண்டி சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வீராசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்தி ரன், மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாருர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கரிகாலன் கோரிக்கை களை விளக்கி பேசினார். மாநிலச் செயலா ளர் ஏ.லதா துவக்கவுரையாற்றினார்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளா ளர் எஸ்.செங்குட்டுவன், மாவட்ட செய லாளர் செ.பிரகாஷ் ஆகியோர் உரையாற்றி னர். முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.சௌந்தர்ராஜன் நிறைவுரையாற்றினார்.