அறந்தாங்கி, மே 28-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூடைப்பந்து வீரர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஊட்டச் சத்துணவு வழங்கியது.
அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இயங்கி வரும் பைட்டிங் ஸ்டார்ஸ் கூடைப் பந்தாட்டக் கழகம் பல ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கூடைபந்து பயிற்சி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவ்வாறு பயிற்சி பெற்றுவரும் கூடைப்பந்து வீரர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஊட்டசத்துணவு வழங்கி வருகிறது.
இந்தாண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு கூடைபந்து பயிற்சியாளர் விஜி முன்னிலை வகித்தார. மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் முபாரக் அலி வரவேற்றார். ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் வி.பொன் துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊட்டசத்துணவு வழங்கி மாணவ மணவிகளான வீரர்களை வாழ்த்திப் பேசினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் விநாயக செந்தில்வேல், வி.முத்துகாமாச்சி, துணைச் செயலாளர் வெங்கட், சட்ட ஆலோசகர் மணிமாறன், மூத்த உறுப்பினர் நாகராஜன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் அசோக், துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், அப்துல் நாசர், முத்துகிருஷ்ணன், குணாளன், நகர் துணைச் செயலாளர்கள் ரபிக், சேக் நத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொதுச்செயலாளர் மலையப்பன் நன்றி கூறினார்.