வீரர்களுக்கு அஞ்சலி
கும்பகோணம், பிப்.15- புல்வாமா தாக்குத லில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் மாவீரர்க ளின் 5 ஆம் ஆண்டு நினை வஞ்சலி தஞ்சாவூர் மாவட் டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சே றையில், டெல்டா மாவட்ட சிஆர்பிஎப் நண் பர்களின் சார்பில் நடைபெற்றது. இதில் திருச்சேறை “சுடர் மாற்று திறனுடையோர் இல்லத் தில்” உள்ள 90 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. டெல்டா மாவட்ட சி ஆர்பிஎப் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும் பத்தினர் பங்கேற்றனர்
இலவச தையல் பயிற்சி
பாபநாசம், பிப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகா னந்தா சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் இல வச தையல் பயிற்சிக் கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தேவ ராசன் தலைமை வகித் தார். நிறுவனச் செயலர் கண்ணதாசன் பயிற்சி யின் நோக்கம், நேரத்தை பயன்படுத்துவது, வரு வாய் ஈட்டும் வழிகள் குறித்துப் பேசினார். பயிற்சி ஆசிரியை பாத்திமா பீவி, சிவா உட்பட ஏராள மான பெண்கள் பங்கேற் றனர்.
ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
அரியலூர், பிப்.15- குருவாயூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்த விரைவு ரயில், அரியலூரை அடுத்த மருதையாறு ரயில்வே பாலத்தை கடந்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்கு வந்த விருத்தா சலம் ரயில்வே போலீ சார், சடலத்தை மீட்டு அரி யலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பெண் பெரம்ப லூர் மாவட்டம், நொச்சி குளம் கிராமத்தைச் சேர்ந்த சினேகா என்ப தும், குடும்பப் பிரச்சனை யால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
ஹோப் பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்
மயிலாடுதுறை, பிப்.15 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி ஹோப் பவுண்டேசன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. முகாமில் சிறப்பு விருந்தி னர்களாக ஊட்டச்சத்து நிபுணர்கள் சதீஷ், சார்லஸ், தவமணி, கனகராஜ் ஆகி யோர் பங்கேற்று, பெற்றோர் களுக்கும், மாணவர்களுக் கும் ஊட்டச்சத்து குறித்த ஆலோசனைகளை வழங்கி னர். நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் சாமுவேல் தாமஸ், நிர்வாகி லிசி சாமு வேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்ட னர். பள்ளி முதல்வர் ஜேக்கப் சத்தியசீலன் நன்றி கூறி னார்.
பிப்.22-இல் மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், பிப்.15- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிப்.22 (வியாழன்) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதேபோல், பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.22 (வியாழன்) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் அனைவரும் அவரவர்களுக்கான நேரத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கூறி பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.
இறந்த ஆடுகளை அறுத்து விற்பனை: குடவாசலில் இறைச்சிக் கடைக்கு சீல்
திருவாரூர், பிப்.15 - குடவாசல் இறைச்சி மார்க்கெட்டில் இறந்த ஆடுகளை அறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இறந்து போன ஆட்டை அறுத்து விற்பனை செய்ய இருந்தவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூ ராட்சி பள்ளிவாசல் அருகே வணிக வளாகம் (இறைச்சி மார்க்கெட்), ஆடு அடிக்கும் தொட்டியுடன் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த கடைகள் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆடுகளை வெட்டுவதற்கு முன்பாக சுகாதார ஆய்வாளர் ஆய்வுசெய்து ஆடுகளை வெட்ட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனை சுட்டிக் காட்டி கடந்த ஜனவரி 20 அன்று தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்ட கோரிக்கை செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை குடவா சல் இறைச்சி வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள சர்புதீன், இறந்து போன ஆட்டை தனது கடைக்கு விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார். இதையறிந்த சிபிஎம் நகரக் குழு உறுப்பினர் டி.ஏ.சரவணன், குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் குட வாசல் பேரூராட்சி துணைத் தலைவர் கே. குணசேகரன் உள்ளிட்டோர், இறந்து போன ஆட்டை பார்வையிட்டு, காவல்துறை மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஷ், கடையை ஆய்வு செய்து இறந்துபோன ஆட்டை கைப்பற்றி குடவாசலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். மேலும், சம்பந்தப்பட்ட இறைச்சி கடையை பூட்டி சீல் வைத்தார்.
திருச்சியில் தானியங்கி மழைமானி நிலையங்கள், தானியங்கி வானிலை நிலையம் அமைக்க இடம் தேர்வு
திருச்சிராப்பள்ளி, பிப்.15 - தமிழ்நாடு முழுவதும் காலநிலை மற்றும் மழையின் அளவை துல்லியமாக கண்காணிக்கும் பொருட்டு 1400 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 10 வட்டங்களில், 48 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் ஒரு தானியங்கி வானிலை நிலையம் அமைக்க இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு பணிகள் தற்போது துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேற்படி தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்பட்டு ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, பிப்.15 - ஸ்ரீரங்கம் கோவிலில் பணி நீக்கம் செய் யப்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி சிஐடியு துண்டு பிரசுரம் வழங்கியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக தனி யார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படை யில் 120 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் எவ்வித முன் அறி விப்பும் இன்றி 120 தூய்மை பணியாளர்களும் கடந்த ஜன.31 அன்று முதல் வேலையி லிருந்து நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வா கம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகத்தை கண்டித் தும், 120 தூய்மைப் பணியாளர்களுக்கு தொ டர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டது. இதில் எவ்வித நடவடிக்கையும் இல்லாத தால் கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கோவில் நிர்வாகம் தூய்மைப் பணி யாளர்களுக்கு வேலை வழங்கவோ, பேச்சு வார்த்தைக்கோ இதுவரை அழைக்கவில்லை. இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் 120 பேரை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்த விவகாரத்தில், தமிழக அரசும் தொழி லாளர் துறையும் தலையிட்டு சட்டப்படியான ஊதியத்தை வழங்கி, வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். திருச்சி மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.679-ஐ வழங்காமல், கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தொழிலாளர்கள் கூலியை கொள்ளையடித்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஒப்பந்தத் தொழிலா ளர்களை பணிநிரந்தரப் படுத்துவதாக சொன்ன தேர்தல் கால வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் புத னன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே கோரிக்கை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதற்கு சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் பகுதி செயலாளர் தர்மா, மாவட்டக் குழு உறுப் பினர் சந்தானம் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாஜக ஆளாத மாநிலங்களுக்கு காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்கப்படுவதில்லை எம்.எம்.அப்துல்லா எம்.பி., பேட்டி
புதுக்கோட்டை, பிப்.15 - பாஜக ஆளாத மாநிலங்களுக்கு காழ்ப் புணர்ச்சி காரணமாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்றார் திமுக மாநி லங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், விவசாயிகள் நாட்டின் தலைநகரில் போராடி வருகிறார்கள். பிரச் சனை இருப்பதால்தான் மீண்டும் போராட்டத் தில் இறங்கியிருக்கிறார்கள். 10 ஆண்டு களில் செய்யாததை இனி எத்தனை 10 ஆண்டு களில் மோடி செய்யப் போகிறார். இந்தியா கூட்டணி 50 இடங்களைக் கூடப் பெறப்போவதில்லை என்கிறார்கள். பாஜக முதலில் 50 இடங்களில் வெற்றி பெறு வார்களா என பார்ப்போம். தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இத்தனை ஆண்டுகாலம் இருந்த மரபு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவருக்குத் தெரியாது. காலம்காலமாக இருந்ததை அவர்தான் மாற்றச் சொல்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு காழ்ப்பு ணர்ச்சியின் காரணமாக ஒன்றிய அரசின் நிதி குறைவாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றார்.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.35 லட்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணி நீக்கம் கோட்டாட்சியர் உத்தரவு
அருப்புக்கோட்டை, பிப்.15- பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.35 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலரை நிரந்தர மாக பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தர விட்டார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கைலாச ஊரணி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக் குமார் (50). இவர் கணக்கி என்ற கிராமத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி பசில் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டம் மூலம் தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் போலியான அடங்கல்களை தயார் செய்துள் ளார். பின்பு, அதை தி நியூ இந்தியா இன்சூரன்ஸ் என்ற காப்பீட்டு நிறுவனத்தில் வழங்கி பயிர் இழப்பீட்டுத் தொகையாக ரூ.35 லட்சத்தை பெற்றுள்ளார் இது தொடர்பாக அவர் மீது புகார் வந்துள்ளது. இதையடுத்து, அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டார். மேலும், அவர் மீது தொடர்ந்து விசாரணை நடை பெற்று வந்தது. அதன் முடிவில், ரூ. 35 லட்சத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசை ஏமாற்றிய குற் றத்திற்காக அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் பி. வள்ளிக்கண்ணு கிராம நிர்வாக அலுவலர் ஜெயக் குமாரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து உத்தர விட்டுள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி.,யின் சாதனைகள் நூல் வெளியீட்டு விழா
மதுரை, பிப்.15- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள் குறித்து ‘‘5 ஆண்டுகள்-150 வெற்றிகள்’’ நூல் வெளியீட்டு நிகழ்வு வெள்ளி யன்று மாலை மதுரை காமராஜர்சாலையில் உள்ள தமிழ்நாடு வர்த்தக சங்க அரங்கில் நடைபெறுகிறது. நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு: ஆலை உரிமையாளர் மீது வழக்கு
சிவகாசி, பிப்.15- சிவகாசி அருகே மரத்தடியில் உயிருக்கு ஆபத்தான முறை யில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதால் ஆலை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகாசி அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ராம் கணேஷ் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர். அங்கு விதி முறைகளை மீறி பட்டாசுகள் வெளியே காய வைக்கப்பட்டிருந்த தாம். மேலும், தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் மரத்தடி யில் பட்டாசுகளை தயார் செய்து கொண்டிருந்தனர். எனவே, ஆலை உரிமையாளர் சுந்தர் மீது எம்.புதுப்பட்டி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி
நத்தம், பிப்.15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி-குமரேச புரத்தை சேர்ந்தவர் குமரன் (50). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் புதனன்று இரவு தனது தோட்டத்து வீட்டில் ஆட்டுக்குட்டிகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். தொடர்ந்து வியாழனன்று காலை வந்து பார்த்த போது, 7 ஆடு களும் தெருநாய்கள் கடித்து கழுத்தில் இரத்தகறையுடன் இறந்து கிடந்தன. இதுகுறித்து வருவாய்துறைக்கும், கால்நடைத்துறை யினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் முன்னிலை யில் குட்டுபட்டி கால்நடை மருத்துவர் சுபலட்சுமி ஆடுகளை பரி சோதனை செய்து உடற்கூராய்வு செய்யப்பட்டன.
சாதி மறுப்பு திருமண ஜோடிகளுக்கு பரிசு
தென்காசி, பிப். 15 தென்காசிமாவட்டம் கடையம் ஒன்றியம் கடையத்தில் அனைத் திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் சார்பாக சாதிமறுப்பு திருமணம் செய்த 5 ஜோடிகளை கெளரவித்து கேக் வெட்டி பரிசு வழங்கப்பட்டது. இதில் மாதர்சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார் .நிர்வாகி வெண்ணிலா முன்னிலை வகித்தார். மாதர்சங்க நிர்வாகி பூங்கொடி வரவேற்று பேசினார் . சிபிஎம்ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்ராஜ் வாழ்த்துரை வழங்கினர். கடையம் வட்டார காங்கிரஸ் மகளி ரணி தலைவி சீதாலெட் சுமி பார்வதி நாதன் தனது கலப்பு திருமண வாழ்க்கை குறித்து பேசினார். மாதர் சங்க ஒன்றிய துணைச்செயலாளர் சின்னத்தாய் நன்றி கூறினார்.