அறந்தாங்கி, ஏப்.26- புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனத்தின் முதல்வர் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஆகியோர் ஆலோசனையின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைவு நாள் பயிற்சியில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப். ஜோன்ஸ் மற்றும் கோபிந்த் ஆகியோர் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான விரிவான தகவல்களை ஆசிரியர்களுக்கு வழங்கினர். வட்டாரக் கல்வி அலுவலர் செழியன் மற்றும் இந்தி ராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் கருத்தாளர்கள ஆசி ரியர்கள் கலந்துகொண்டனர்