எண்ணும் எழுத்தும் திட்டமிடல் கூட்டம்
அறந்தாங்கி, ஜூன் 21- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி வட்டார வளமையத்தில் எண் ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்பு முன் திட்டமிடல், கற்றல் -கற்பித்தல் உபகர ணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு முன் திட்டமிடல் கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழி யன் தலைமை நடை பெற்றது.
மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா மற்றும் வட்டார வளமையை மேற்பார் வையாளர் (பொ) சிவ யோகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் கருத்தாளர்கள் பங் கேற்று, இணையவழி கூடுகை குறித்த அட்டை கள் தயாரித்தல், வெற்றி கதைகள் குறித்த படங்கள் தயாரித்தல், புத்தகக் கருத்துறை சார்ந்த படங்கள் தயாரித்தல், மதிப்பீட்டு சொற்களஞ்சி யம், மின் அட்டைகள் தயாரித்தல், ஆங்கிலப் பாடத்திற்கு கதை கூறுத லுக்கு சொல் அட்டைகள் தயாரித்தல் மற்றும் முகமூடி தயாரித்தல் போன்ற கற்றல் உப கரணப் பொருட்களை தயாரித்தனர்.
தரங்கம்பாடியில் ஜமாபந்தி
மயிலாடுதுறை, ஜூன் 21- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டாட் சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடை பெற்றது.
சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச் சனா தலைமையில் நடை பெற்ற முகாமில் தரங்கம் பாடி வட்டத்துக்குட்பட்ட தில்லையாடி, திருக்க டையூர், பிள்ளைபெரு மாள் நல்லூர், மாணிக்க பங்கு, சாத்தங்குடி, எருக் கட்டாஞ்சேரி, காழியப் பன்நல்லூர், தி.மணல் மேடு, இலுப்பூர், உத்தி ரங்குடி ஆகிய வரு வாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப் பட்டன. பல்வேறு கோ ரிக்கை தொடர்பான மனுக் களை பொது மக்கள் வழங்கினர். தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ், மண்டல துணை வட்டாட் சியர் சக்திவேல், தலை மையிடத்து தனி வட்டாட் சியர் பழனியப்பன் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது
திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- திருச்சி தென்னூர் பகுதியில் கணினி மையம் நடத்தி வரும் ஒரு வர், பர்சனல் ஐ.டிகளை பயன்படுத்தி ரயில்வே யில் டிக்கெட் புக்கிங் செய்து, அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருச்சி ஜங்சன் ரயில்வே பாதுகாப்பு படை போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காலாவதி யான 11 டிக்கெட்டுகள் அவரிடம் இருந்தன. அதைத் தொடர்ந்து பாது காப்பு படையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.