districts

திருச்சி முக்கிய செய்திகள்

எண்ணும் எழுத்தும் பயிற்சி

பாபநாசம், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வள  மையத்தில் நடந்த எண் ணும் எழுத்தும் பயிற் சியை பாபநாசம் வட்டார தொடக்கக் கல்வி அலுவ லர், பாபநாசம் வட்டார  வள மைய மேற்பார்வை யாளர் (பொ) முருகன் தொடங்கி வைத்தனர். பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொ டக்கப் பள்ளி, நடு நிலைப் பள்ளி, அரசு  உதவிபெறும் பள்ளி களைச் சேர்ந்த 1 முதல்  5 வரை வகுப்பெடுக்கும் 217 ஆசிரிய, ஆசிரியை கள் பயிற்சியில் பங்கேற்ற னர். ஜூன் 26 முதல் 29  வரை நடந்த இப்பயிற்சி யில் 12 ஆசிரியர்கள் கருத் தாளர்களாக பங்கேற்றனர்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி

பாபநாசம், ஜூன் 29- தமிழக அரசின் கண் ணொளி காப்போம் திட்டத்தின் சார்பில் ஆசி ரியர்களுக்கு பயிற்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அர சினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் கபிஸ்தலம் கண் மருத்துவ உதவி யாளர் ரெங்கராஜ் ஆசிரி யர்களுக்கு பயிற்சி யளித்தார். இதில் கபிஸ் தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ  அலுவலர் தீபக், பாப நாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 32 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கார் மோதி முதியவர் பலி

அரியலூர், ஜூன் 29- அரியலூர் மாவட்டம்  செந்துறை அருகே யுள்ள குழுமூர், துர்க்கை யம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் மணி வண்ணன் (64). வெள்ளிக் கிழமை இவர், தனது  தம்பி மகன் க.கோவர்த்த னனை (18) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மயிலாடுதுறை சென்று விட்டு, ஊருக்கு  திரும்பினார். கங்கை கொண்ட சோழபுரம் பொன்னேரி அருகே சென்ற போது, அந்த வழி யாக வந்த கார் மோதி யதில் பலத்த காயம டைந்த மணிவண்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத் தான நிலையில் கோ வர்த்தனன் ஜெயங் கொண்டம் அரசு  தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார். இதுகுறித்து ஜெயங் கொண்டம் காவல் துறை யினர் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநரான கடலூர் மாவட்டம், சோழதரம், குடிகாடு, கீழத் தெரு வைச் சேர்ந்த பழனிச்சா மியிடம் (36) விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

திருவாரூர், ஜுன் 29- திருவாரூர் மாவட்டம் குடவாசல் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளம் செஞ் சிலுவை சங்கம் சார்பில்  போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.மாரிமுத்து தலைமை ஏற்று உரையாற்றினார். குடவாசல் தீயணைப்பு நிலைய அலுவலர் என். ஜோதிபாசு உரையாற்றி னார். இதில் போதைப்  பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறுக!
வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 29 - குற்றவியல் சட்டங்களில் ஒன்றிய அரசு மேற்கொண்ட திருத்தங்களைத் திரும்பப் பெற வலி யுறுத்தி புதுக்கோட்டை வழக்குரைஞர் சங்கத்தினர் உள்பட மாவட்டம் முழுவதும் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் சின்னராஜு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பரமசிவம், இணைச் செயலர் அருள்மொழிவேந்தன், பர்வீன் பானு, பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு, அவற்றுக்கு சம்ஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிய ஒன்றிய அரசு, அவற்றை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும் அறிவித்துள் ளது. இந்தச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற  வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

இதே போல, அறந்தாங்கியில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் லோகநாதன், ஆவுடையார்கோவிலில் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் ராஜேஷ், கீரனூ ரில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் நடராஜன், திரு மயத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரெங்க ராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பாபநாசம் விற்பனைக் கூடத்தில்
பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூன் 29 - வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும், தஞ்சாவூர் விற்ப னைக் குழுவிற்குட்பட்ட, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. 

பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மதகரம், சத்திய மங்கலம், வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 1000 விவ சாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்ப னைக்கு எடுத்து வந்திருந்தனர்.  கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, தெலுங்கானா, தேனி, பண்ருட்டி உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த 13 வணிகர்கள் கலந்து கொண்டனர். 

வரப் பெற்ற 147 மெட்ரிக் டன் அளவு பருத்திக்கு  அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309, குறைந்த பட்சம் ரூ.6289, சராசரி ரூ.6811 என விலை நிர்ணயிக்கப் பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 1 கோடி.  பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி தலைமையும், மேற் பார்வையாளர் சிவானந்த் முன்னிலையும் வகித்தனர்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  கொப்பரை, குவிண்டாலுக்கு ரூ.7500 என்ற அதிக பட்ச விலைக்கு விற்பனையானது. மேலும் இங்கு எள்,  உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை, மற்றும் பாரம்ப ரிய நெல் வகைகள் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.