districts

மழைக்கால இடர்ப்பாடுகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை, நவ.22 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை ஆய்வு  மேற்கொண்டார்.  பின்னர் அவர் கூறுகையில், “இந்த ஆய்வின்போது, மழை  அளவின் பதிவேடுகளையும், மழையினால் ஏற்படும் உயிரி ழப்புகள், பாதிப்புகள், கட்டட இடிமானங்கள் உள்ளிட்ட வற்றின் விவரங்கள் கேட்டறியப்பட்டன. பருவமழை பெய்து  வரும் நிலையில், இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்ட டங்களை உடனடியாக எவ்வித இடையூறும் ஏற்படாத வகை யில் அப்புறப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாது காப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 - பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார்  நிலையில் உள்ளன.  மழைக்காலங்களில் ஏற்படும் இடர்ப்பாடு கள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்- 1077,  04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை  தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்றார்.