districts

புதுயுக்திகள் மூலம் கழிவுகளை கையாளுதல் பற்றிய அறிக்கைக்கு ரூ.5 லட்சம் பரிசு

திருவில்லிபுத்தூர், ஜன.2- திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையா ளர் டி.மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குப் பைகளை பிரித்து சேகரித்தல், மக்கக்கூடிய குப்பைகளை உரமாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நிலைகள் உள்ளன. இத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தற்பொ ழுது ஸ்வச் டெக்னாலஜி சேலஞ்ச் போட்டி நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க திட,திரவ மற்றும் நெகிழி கழிவுகளை  புதுமையான யுக்தி களை பயன்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக கையாளுதல் பற்றிய தீர்வுகளை  செய லாக்க திட்ட அறிக்கையாக சமர்பிக்க மாண வர்கள், தனி நபர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வரவேற்கப் படுகிறார்கள்.  மேலும், சிறந்த ஐந்து புதுமையான தீர்வு களை தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பாராட்டு மற்றும் வெகுமதியாக முதல் பரிசு ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.2.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1.50 லட்சம், நான்காம் பரிசு ரூ.1 லட்சம், ஐந்தாம் பரிசு ரூ.75 ஆயிரம் என வழங்க இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனவே, தங்களுடைய புது மையான மற்றும் தொழில்நுட்ப ரீதியான  தீர்வுகளை செயலாக்க திட்ட அறிக்கை யாக தயார் செய்து commr.srivi@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 6.1. 2022 க்குள் அனுப்பி இப்போட்டியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இப்போட்டிகள் தொடர்பான கூடு தல் விபரங்களுக்கு இந்நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் ஆகியோரை 8610363633, 8489277404 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.