districts

பாபநாசத்தில் வடமாநிலத்தவர்கள் பங்கேற்ற கலைநிகழ்வு

பாபநாசம், ஜுன் 27-  

     பாபநாசம் தென்னகப் பண்பாட்டு மையம், பாப நாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட்  இணைந்து நடன நிகழ்ச்சியை நடத்தின.  

    பாபநாசம் வித்யா பாடசாலையில் நடந்த நிகழ்வில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாவைச் சேர்ந்த கலைக் குழு வினர் நடன நிகழ்ச்சியை நடத்தினர்.  

    பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், அரசுக் குழும நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், ஆடிட்டர்  சண்முகம், லயன்ஸ் கிளப் ராஜா முஹமது, முத்தமிழ்ச் செல்வம், சாப்ஜான், நவநீதகிருஷ்ணன், அன்பு சீனி வாசன், மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ், சம்பந்தம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.