districts

சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஊக்கு அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

திருச்சிராப்பள்ளி, ஆக.9 -

      திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூர்  பர்மா காலனியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது  இரண்டு வயது மகன் சாப்பிடும் போது எதிர்பாராத விதமாக ஊக்கு ஒன்றை விழுங்கிவிட்டார்.

     இந்நிலையில் குழந்தை திடீரென மூச்சுவிட சிர மப்பட்டது. என்ன காரணம் எனத் தெரியாத பெற்றோர்,  குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு வந்தனர். அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, குழந்தைக்கு எக்ஸ்ரே  எடுத்து பார்த்த போது, தொண்டைப் பகுதியில் ஊக்கு ஒன்று திறந்து நிலையில் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

     இதையடுத்து காது, மூக்கு, தொண்டைப் பிரிவு மருத்துவர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவ குழுவினர், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையின்றி குழாய் மூலம் ஊக்கை வெளியே எடுத்தனர். பின்னர் குழந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.