districts

img

காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து!

காஞ்சிபுரம், ஜூலை 29 - காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகா லட்சுமி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது (ஜூலை 29) திங்களன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். 51 வார்டுகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவுக்கு 33 உறுப்பினர்களும், விசிக, காங்கிரஸ் தலா 1 உறுப்பினர் என ஆளும் கட்சிக்கு 35 உறுப்பினர்களின் பலம்  உள்ளது. மேயர் மீதான அதிருப்தியின் விளைவாக மேயருக்கு எதிராக சில திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்களுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் காலை 10 மணி முதல் இதற்கா காத்திருந்தார். ஆனால் அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்கள் உட்பட யாருமே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அவர்கள் அனைவரும் சுற்றுலா சென்று விட்டனர். இதனால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது. வாக்கெடுப்பு ரத்தானதால் நம்பிக்கை இல்லா தீர்மானமும் ரத்தாவ தாக ஆணையர் அறிவித்தார். மேயருக்கும் ஆளும் கட்சி கவுன்சில ருக்கும் நடைபெற்றுவரும் மோதல் காரண மாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தேங்கிக்கிடக்கின்றன. எனவே மாநில அரசு இதில் தலையிடவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.