districts

மறுஏலம் என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடி மனை பயனாளிகள், குத்தகை விவசா யிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திங்க ளன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் பேசியதாவது:

பல தலைமுறைகளாக கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயம் போன்ற இடங்களின் அடி மனைகளில் குடியிருப்போரின் கோரிக் கைகளை வலியுறுத்தி கடந்த 2, 3  ஆண்டுகளாக பல்வேறு போராட்டங களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வரு கிறோம்.

காலங்காலமாக முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தத் தான்,  2018 இல் இந்த அமைப்பு உருவாக் கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இந்துசமய அறநிலையத்துறைக்கும், 37 ஆயிரம் திருக்கோவில்களுக்கும் சொந்தமான இடங்களில் அடிமனை வாடகைதாரர்களாக இருக்கக் கூடிய இந்த பயனாளிகள்தான், காடு மேடாக  இருந்த இடங்களையும், நிலங்களை யும் நஞ்சை நிலமாகவும், புஞ்சை நில மாகவும், மானாவாரி நிலமாகவும் மாற்றியுள்ளனர்.

கோயில் இடங்களில் குடிசை அமைத்து குடியிருப்பதால், கோவில் களில் உள்ள விளக்குகள் எரிவதற்கும்,  ஒரு காலபூஜை, இரண்டு கால பூஜை,  நான்கு கால பூஜை என நடப்பதற்கும் தன்னால் முடிந்த ஒரு தொகையை வழங்கி வருகின்றனர். 

வீடுகட்டி குடியிருப்பது சொந்த உழைப்பில்தான்

அடிமனை மட்டும்தான் கோவி லுக்குச் சொந்தமானது. வீடு கட்டி  குடியிருப்பது நம்முடைய சொந்த  உழைப்பில்தான். கொஞ்ச கொஞ்ச மாக நம்மை வாடகைதாரர்களாக மாற்றி, நியாயமான வாடகை நிர்ணயிப் பதாக கூறி, அநியாய வாடகையை உயர்த்தி இன்று பலமடங்கு வாடகை உயர்ந்து இருக்கிறது.

கோவில் இடங்களை வைத்திருந்த  ஆளுங்கட்சி, ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த மற்றும் வசதி படைத்தவர் களெல்லாம் அவற்றை தங்களுடைய தாக்கி விட்டனர். ஆனால் கோயில் இடங் களில் குடியிருக்கும் ஏழைகள் பட்டா  வேண்டுமெனக் கேட்டால், “சிவன் சொத்து குல நாசம்” என்று கூறுகின்ற னர். ஏழைகளின் குலம் மட்டும்தான் நாசமாகுமா?.

நம் முன்னோர்கள் தானமாக கொடுத் ததுதான் கோவில் சொத்துகள். கோவில்  இடங்களுக்கான வாடகை, நிலங்க ளுக்கான குத்தகை பணம், பக்தர்கள்  அளிக்கும் காணிக்கைகளை வைத்துத் தான் இந்து சமய அறநிலையத் துறையே செயல்படுகிறது. அரசாணை 318-ஐ செயல்படுத்திட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம்.

காலங்காலமாக கோவில் நிலங்க ளில் குத்தகை செய்கிற ஏழை விவசா யிகளை, ‘மறுஏலம்’ என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக் கையை கைவிட வேண்டும். முறை யாக வாடகையை வசூல் செய்தால் ஒரு  கால பூஜை, இரண்டு கால பூஜை அல்ல  ஆறுகால பூஜைகூட செய்ய முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.