புதுக்கோட்டை வந்து சென்ற என்ஐஏ அதிகாரிகள்'
புதுக்கோட்டை, செப்.24 - பயங்கரவாத இயக் கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாநி லத்தின் பல்வேறு பகுதி களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகள் செவ்வாய்க் கிழமை சோதனை மேற் கொண்ட நிலையில், புதுக்கோட்டைக்கு அந்த அதிகாரிகள் வந்துவிட்டு திரும்பிச் சென்றனர். புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் செவ்வா யன்று அதிகாலையில் தேசிய புலனாய்வு முக மையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் தங்கியிருந்தனர். சோத னையின்போது பாது காப்பு தேவைப்படும் என காவல்துறையினரின் உதவியை கேட்டிருந்த னர். ஆனால், பாது காப்புப் பணிக்கு காவ லர்கள் தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டு, அவர்கள் அனைவரும் திருச்சிக்கு திரும்பிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரி வித்தன. மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் சோ தனை நடத்தப்பட வில்லை.
மது விற்பனை: 4 பேர் கைது
அறந்தாங்கி, செப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த நாகுடி பகுதியில் வீட்டில் வைத்து சட்ட விரோத மாக மது விற்பனையில் ஈடுபடுவதாக, நாகுடி காவல் உதவி ஆய்வா ளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் சம்பவ இடத் திற்குச் சென்ற நாகுடி காவல் உதவி ஆய்வா ளர், அங்கு மது விற்ப னையில் ஈடுபட்ட சிவராஜ் (38), பவானி (38), அய்யாக் கண்ணு (60), குமரேசன் (32) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களி டமிருந்து 99 மதுபாட்டில் கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகிய வற்றை கைப்பற்றி, அவர்களை சிறையில் அடைத்தனர்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அறந்தாங்கி, செப்.24 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அர சினர் பாலிடெக்னிக் மாண வர்களுக்கு உயர் கல்வி யில் மெட்ராஸ் ஐஐடியில் சேர்ந்து பயில்வதற்கு, கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு விழிப் புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ச. குமார் தலைமை வகித் தார். கல்லூரி வளாகத் தில் ஒரு கோடி பனை விதை நடும் பணியினை தொடங்கி வைத்து, ஐஐடி கல்லூரியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன. அதில் கிராமப் புற மாணவர்கள் எந்த வகையான பாடத்திட்டத் தின் மூலம் உயர் கல்வியை பெற முடியும் என்ற தகவல்களை ஐஐடி திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் எடுத்து ரைத்தார். கல்லூரி மாண வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் புதிய கிளைச் செயலாளர்கள் தேர்வு
புதுக்கோட்டை, செப்.24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. கோவில்வீரக்குடியில் நடைபெற்ற இரண்டு கிளை மாநாடுகளில் கே.கார்த்திக்கேயன், சி.உதயகுமார் ஆகியோர் கிளைச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல பழைய வீரக்குடியில் ஏ.அய்யாவு, வைத்திக்கோவிலில் கே.மாரிமுத்து, வைத்தூரில் அழகிரி, தொழுதான்பட்டியில் கல்யாணராமன், சீரங்கப்பட்டியில் முருகன், வழமங்கலத்தில் எஸ்.குழந்தை, வடுகப்பட்டியில் ஜி.ராஜா, கோட்ரப்பட்டியில் ரவிச்சந்திரன், ஏடிகே நகரில் மணி, பெரண்டையாபட்டியில் ஜி.தாமரைச்செல்வன், வடுதாவயலில் எம்.விக்னேஷ், ராமுடையான்பட்டியில் காமராஜ் ஆகியோர் கட்சியின் கிளைச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கீரனூர் 6 ஆவது வார்டில் என்எஸ்கே.அலி, மின்னாத்தூர் வடக்கில் முத்துநிலவன், மேற்கில் குமரன், பாப்புடையான்பட்டியில் செல்லத்தம்பி, ராவுசாப்பட்டியில் செல்லத்துரை, வடுதவாடியில் செல்வராஜ், விடானிவயலில் சின்னாத்தாள், கேர்க்காலனியில் பொன்மொழி, கிள்ளுக்கோட்டையில் பாலக்கண்ணு, குன்றாண்டார்கோவிலில் பன்னீர்ச்செல்வம், பாரதி நகரில் வெண்ணிலா ஆகியோர் கிளைச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேற்கண்ட கிளை மாநாடுகளை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், எம்.மகாலெட்சுமி (பேரூராட்சி கவுன்சிலர்), ஜி.தாமரைச் செல்வன் (ஊ.ம.துணைத் தலைவர்), என்.லெட்சுமணன் (ஊ.ம.துணைத் தலைவர்) உள்ளிட்டோர் வழிநடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் சிபிஎம் கிளை மாநாடுகள்
திருவாரூர், செப்.24 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் ஒன்றியத்தில் 30 கிளைகள் உள்ளன. இதில் புதூர் (ஏ) கிளைச் செயலாளராக ஜி.ரமேஷ், புதூர் (பெண்) கிளைச் செயலாளராக எம்.தேவிகா, உமா மகேஸ்வரபுரம் செயலாளராக பி.ராஜேந்திரன், திருக்கார வாசல்(ஏ) செயலாளராக பி.சிவக்குமார், திருக்காரவாசல் (பெண்) செயலாளராக கே.சுஜாதா, பின்னவாசல் (ஏ) செய லாளராக டி.சின்னய்யன், பின்னவாசல் (பெண்) செயலாள ராக இ.தனலட்சுமி, வேப்பத்தாங்குடி(ஏ) செயலாளராக ஏ.பெரியான், வேப்பத்தாங்குடி (பெண்) செயலாளராக எஸ்.சுமித்திரா, குன்னியூர் செயலாளராக எம்.சண்முகசுந்தரம், மாங்குடி செயலாளராக எம்.முரு கையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூத்தங்குடி (ஏ) செயலாளராக கே.செல்வராஜ், கூத்தங்குடி (பெண்) செயலாளராக டி.தனலட்சுமி, பெருங்குடி செயலாளராக எம்.செல்வராசு, அலிவலம் செய லாளராக டி.பக்கிரிசாமி, தப்பளாம்புலியூர் (ஏ) செயலாள ராக எஸ்.கார்த்திக், தப்பளாம்புலியூர் (பெண்) செயலாள ராக எஸ்.சரோஜா, புதுப்பத்தூர் (ஏ) செயலாளராக பி. முருகானந்தம், புதுப்பத்தூர் (பெண்) செயலாளராக கே. ஜெயா, புதுப்பத்தூர் தெற்கு செயலாளராக ஏ.பூமி நாதன், பள்ளிவாரமங்கலம் செயலாளராக ஜி.கருப்பை யன், வைப்பூர் செயலாளராக எம்.கன்னுசாமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், நன்னிலம் ஒன்றியத்தில் திருமிச்சூர் வடக்கு கிளைச் செயலாளராக கே.ராஜகுரு, திருமிச்சூர் தெற்கு செயலாளராக கே.செந்தில், கூத்தனூர் செயலா ளராக ஆர்.கோபாலகிருஷ்ணன், கடுவங்குடி செயலாள ராக ஜி.இளங்கோவன், திருக்கொட்டாரம் செயலாளராக வரத.வசந்தபாலன், கொல்லுமாங்குடி செயலாளராக கே.கண்ணன், வேலங்குடி செயலாளராக ஆர்.பெருமாள், ஏனகுடி செயலாளராக ஆர்.வாசுதேவன், மேனாங்குடி செயலாளராக ஆர்.விஜயகுமார், குருங்குளம் செயலா ளராக டி.பாலையா, நெடுஞ்சேரி செயலாளராக கே.அமுல் நாதன், சன்னாநல்லூர் செயலாளராக கே.பி.பாக்கிய ராஜ், விசளூர் செயலாளராக டி.சின்னராசு, போழகுடி செயலாளராக எம்.இளவரசன், கொட்டூர் செயலாளராக சுதாகர், வானூர் கிளை செயலாளராக கே.தியாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கிளை மாநாடுகளில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குடவாசல், வலங்கைமான் ஒன்றியம்
குடவாசல் நகரம் மற்றும் வலங்கைமான் ஒன்றியங் களில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். குடவாசல் 2 ஆவது வார்டு கிளை செயலாளராக எம்.சண்முகம், 3 ஆவது வார்டு செயலாளராக டி.கோபி, 5 ஆவது வார்டு செயலாளராக ஜி.மனோகரன், 7 ஆவது வார்டு செயலாளராக ஆர்.வி. லெனின், 8 ஆவது வார்டு செயலாளராக ஆர்.ராஜா, 9 ஆவது வார்டு செயலாள ராக ஜி.தனசேகரன், 13 ஆவது வார்டு செயலாளராக எம்.சோமு, 15 ஆவது வார்டு செயலாளராக பி.பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வலங்கைமான் ஒன்றியத்தில், கொக்கலாடி கிளைச் செயலாளராக ஜி.தியாகராஜன், கொக்கலாடி (பெண்) செயலாளராக ஆர்.சங்கீதா, மாணிக்கமங்கலம் செயலா ளராக யு.உதயகுமார், மேலசேதுராயநந்தம் செயலாள ராக வி.பழனி, ராமப்பத்தோட்டம் செயலாளராக வி.தவ மணி, சாரநத்தம் செயலாளராக இ.ரகுபதி, மானநல்லூர் செயலாளராக எஸ்.பாஸ்கர், பூந்தோட்டம் செயலாளராக ஆர்.அருண்குமார், நார்த்தங்குடி செயலாளராக டி.பாரதி மோகன், களத்தூர் செயலாளராக எம்.சண்முகம், ஆவூர் செயலாளராக சி.இளையராஜா, பாதிரிபுரம் செய லாளராக டி.சௌந்தர், கோவில்பத்து செயலாளராக கே. மணிகண்டன், ஆண்டாங்கோவில் செயலாளராக கே.சர வணன், கண்டியூர் செயலாளராக வி.ஜெயராஜ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கரூர்: தோகைமலை ஒன்றியத்தில் சிபிஎம் கிளை மாநாடுகள்
கரூர், செப்.24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய குழுவிற்குட்பட்ட கிளை மாநாடுகள் நடைபெற்றன. தோகைமலை ஒன்றியத்தில் உப்பிலியப்பட்டி கிளைச் செயலாளராக ஆர். ரங்கசாமி, பேரூர் செயலாள ராக அழகேசன், கீழவெளியூர் செயலாளராக பாலு, கவுண்டம்பட்டி செயலாளராக பி.முருகேசன், நாகனூர் செயலாளராக இ.சந்திரன், சுக்காம்பட்டி செயலாளராக பி. காளிமுத்து, தோகைமலை (எ) செயலாளராக கே. பாலகிருஷ்ணன், தெலுங்கப்பட்டி செயலாளராக எ.பெரி யசாமி, தோகைமலை (பி) செயலாளராக சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாடுகளில் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சக்திவேல், தோகைமலை ஒன்றியச் செயலாளர் ஆ.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம்: சிபிஎம் கிளை மாநாடுகள்'
கும்பகோணம், செப்.24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 கிளைகளில் முதல் கட்ட கிளைமாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் கன்னி தோப்பு சுப்பிரமணியன், வடக்குதெரு மணிகண்டன், காமராஜர் காலனி பரசுராமன், அரங்க கிளை சண்முகம் ஆகியோர் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட னர். இம்மாநாடுகளில் சிபிஎம் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் (பொ) சேகர் உள்ளிட்டோர் சிறப்பு ரையாற்றினர்.