தஞ்சாவூர், ஜூன் 18–
பட்டுக்கோட்டை அருகே இளம் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிரா மத்தை சேர்ந்த சதீஷ் (28), அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா (22),. இருவருக்கும் கடந்த மே.25 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சதீஸ் வேலைக்கு வந்த சில மணி நேரத்தில், சுவிதா போன் செய்து சதீஷை வீட்டிற்கு வர கூறியுள் ளார்.
ஆனால், வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு நினைத்த நேரத்தில் வரமுடியாது என சதீஷ் கூறியுள்ளார். பின்னர், மதியம் சுவிதா, சதீஷுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சுவிதா தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சதீஷிடம் கூறிவிட்டு, வாட்ஸ் அப் காலை கட் செய்யாமல், மதியம் 3:45 மணிக்கு கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், உடனடியாக தனது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தூக்கிட்டபடி கிடந்த சுவிதாவை மீட்டு, உடனடி யாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சோகமாக இருந்த சதீஷ், வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு சதீஷ்க்கு சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில், சனிக்கிழமை காலை மருத்துவமனையை விட்டு வெளி யேறினார்.
பின்னர், வீட்டிற்கு சென்று, தனது மனைவி சுவிதா இறந்த அதே நேர மான மதியம் 3:45 மணிக்கு சனிக்கிழமை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக சுபிதாவின் பெற்றோர்கள் சந்தேகம் தெரி வித்துள்ளனர்.