districts

திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே புதிய டெமு ரயில் மே 3 முதல் இயக்கம்

தஞ்சாவூர், ஏப்.27 - திருச்சி ரயில்வே கோட்டம் சார்பாக  திருவாரூர் சந்திப்பில் இருந்து, பட்டுக்கோட்டைக்கு புதிய டெமு  பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண்.  06851/06852) மே 3 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இந்த டெமு ரயில் வாரத்தில் 5  நாட்கள் திங்கள் முதல் வெள்ளி  வரை இயங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்காது. திருவாரூ ரில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு  மாங்குடி, மாவூர் சாலை, திருநெல்லிக் காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக் கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு வந்து சேரும். மீண்டும் இந்த ரயில் பட்டுக்கோட் டையில் இருந்து மாலை 5.15 மணிக்கு  புறப்பட்டு திருவாரூருக்கு 6.55 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் வழித்தடத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வியா பாரிகள், ரயில் பயணிகள், அலுவ லர்கள் ஆகியோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த ரயிலை இயக்க உத்தர விட்ட தெற்கு ரயில்வே பொது மேலா ளர், திருச்சி கோட்ட ரயில்வே  மேலா ளர், முதுநிலை கோட்ட இயக்கவியல்  மேலாளர், முதுநிலை கோட்ட  வர்த்தக மேலாளர் மற்றும் அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும் இந்த தடத்தில் உள்ள ரயில் பயணிகள். வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், தன்னார்வ அமைப்பு கள், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.  திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில் நேரம் மாற்றம்  திருவாரூர்-காரைக்குடி பயணி கள் ரயில் (வண்டி எண்.06197/06198) திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை  வழியாக காரைக்குடி சென்று, மீண்டும் திருவாரூரை வந்தடைகிறது. இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயங்கி  வருகிறது. மே 3 ஆம் தேதியில் இருந்து இந்த ரயிலின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில், திருவாரூரில் காலை  6.20 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட் டைக்கு காலை 7.56 மணிக்கு வந்த டைந்து, மீண்டும் புறப்பட்டு காரைக் குடியை காலை 9.35 மணிக்கு சென்ற டைகிறது. மீண்டும் இந்த ரயில் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு, பட்டுக்கோட்டைக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, தொ டர்ந்து திருவாரூர்க்கு இரவு 9.25 மணிக்கு சென்றடைகிறது. கம்பன்-மன்னை விரைவு ரயில்களில்... இந்த நேர மாற்றம் காரணமாக அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக் கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப் பேட்டை, தில்லைவிளாகம், திருத்து றைப்பூண்டி பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்ல, இந்த ரயிலில் திருவாரூருக்கு சென் றால், திருவாரூரில் காரைக்கால்-சென்னை எழும்பூர் கம்பன் விரைவு  ரயில் (வண்டி எண் 16176), மன்னை  எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16180)  விரைவு ரயில்கள் மூலம் திருவாரூ ரில் இருந்து சென்னை எழும்பூருக்கு  செல்லலாம்.  அதேபோல சென்னையில் இருந்து  இந்த பகுதிகளுக்கு வருபவர்கள், திருவாரூரில் இருந்து இந்த ரயிலின் மூலமாக இந்தப் பகுதிகளுக்கு வர லாம். மேலும் இந்த ரயில் திருச்சி-காரைக்குடி டெமு ரயிலுக்கு இணைப்பு ரயிலாகவும் இருக்கும். காரைக்குடியில் இருந்து திருச்சி-காரைக்குடி டெமு ரயில் மூலமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு சென்று வரலாம் என்பதால் பயணி களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

;