திருச்சிராப்பள்ளி, நவ.25- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முத்தரசநல்லூர் ஊராட்சி முருங்கைப்பேட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணிகள் நிழற்குடை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக் கரசர் வெள்ளியன்று திறத்து வைத்தார். இதனை தொடர்ந்து திருச்சி 61-வது வார்டு ஜே.கே நகரில் புதிய பயணியர் நிழற்குடை, திருச்சி 65-வது வார்டு செம்பட்டு பசுமை நகரில் புதிய நியாய விலை கடை / சூரியூர் ஊராட்சியில் புதிய பயணியர் நிழற்குடை ஆகிய வற்றை திருநாவுக்கரசர் எம்பி திறந்து வைத்தார். தொடர்ந்து 36-வது வார்டு அம்பிகாபுரத்தில் சிமெண்ட் சாலைப் பணியினை பார்வையிட்டு திருநாவுக்கரசர் எம்பி ஆய்வு செய்தார்.