சிவகாசி, ஜூன்.28-
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் ரூ.309.10 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை காணொலி காட்சி வாயி லாக சென்னையிலிருந்து தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். விருது நகர் மக்களவை உறுப்பினர்மாணிக்கம் தாகூர்,சட்டப்பேரவை உறுப்பினர்சீனி வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்- பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தினை பார்வையிட்டு,துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் இந்து மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.