சென்னை, மே 5-
குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுக்கும் செயல்திட்டம் (Preventing Online Child Sexual Exploitation) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தை தோழமை, டிடிஎச் நெதர் லாந்து மற்றும் சில்ட்ரன் ஆஃப் இந்தியா பவுண்டே ஷன் உள்ளிட்ட அமைப்பு கள் இணைந்து நடத்தின.
டிடிஎச் நெதர்லாந்து அமைப்பு உலகளவில் குழந் தைகள் பாதுகாப்பு தொடர் ர்பாக 18 நாடுகளில் செயல் படும் ஒரு சர்வதேச அமைப்பாகும். குழந்தைத் தொழிலாளர், குழந்தை களைத் தவறாகப் பயன் படுத்துதல், வணிகரீதியாக குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கு தல் மற்றும் குழந்தை கடத் தல் உள்ளிட்ட குழந்தைகள் மீதான மோசமான சுரண்டல் களுக்கு எதிராக இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது.
சில்ட்ரன் ஆஃப் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் கல்வி தொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபட்டு வரு கிறது.
அதேபோல ஒடுக்கப் படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் உரி மைகள், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளுக்கான ஆதார மையமாக தோழமை அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியா வில் குழந்தை பாதுகாப்புத் திட்டங்களை ஒருங்கிணைக் கவும் அது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை டிடிஎச் நெதர்லாந்து அமைப் புடன் இணைந்து இரண்டு அமைப்புகளும் நடத்தின.
இந்த நிகழ்ச்சியில் தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, டெர்ரஸ் தேஸ் ஹோம்ஸ் நெதர்லாந்தின் இயக்குநர் தங்கப்பெருமாள் பொன் பாண்டி, தமிழ்நாடு அரசின் மாதிரி பள்ளிகள் திட்டக் குழு செயலர் சுதன், ஸ்டெல்லா மேரி கல்லூரி யின் பேராசிரியர் லூர்து மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுத்தல், பியர் டு பியர் கற்றல் முறை வழியாக குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல், ஆன்லைன் குற்றங்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் மனநல பாதிப் புகளில் இருந்து அவர்களை மீட்டு வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு எற்படுத்து தல் குறித்து விவாதிக்கப் பட்டது. மேலும் குழந்தை கள் மீதான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுத்தல் என்ற செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.