மயிலாடுதுறை, மே 20 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் 12 ஆவது ஒன்றிய மாநாடு வி.துர்காதேவி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி. கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா, மாவட்ட தலைவர் பி.என்.ராஜ லெட்சுமி, ஒன்றிய செயலாளர் டி.கண்ணகி உள்ளிட்டோர் உரையாற்றினர். செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உரு வாக்கி, புதிய தொழிற்சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். மகளிர் குழு என்ற பெயரில் பெண்களை பாதிக்கும் நுண்நிதி கடன்களை தடுக்க வேண்டும். மாமாகுடி ஊராட்சிக்குட்பட்ட அப்பராசப்புத் தூர் கிராமத்தில் உள்ள 33 குடும்பங்களுக்கு வீட்டு வரி ரசீது, நூறுநாள் வேலை ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண்டும். வழங்க மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சங்கத்தின் புதிய ஒன்றிய தலைவராக துர்காதேவி, செயலாளராக டி.கண்ணகி, பொருளாளராக எஸ்.செம்மலர், துணைத் தலைவராக கே.வாசுகி, துணை செயலாள ராக எம்.மாலா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். புதிய நிர்வாகிகளை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டது.