districts

img

கிளியனூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

மயிலாடுதுறை, ஜூலை 27 - மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார  நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து போனதால், ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம்  இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்தமான அந்த இடத்தை மருத்துவ மனை கட்டுவதற்காக இஸ்லாமியர்கள் இலவசமாக வழங்கியதை யடுத்து ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும்  நிகழ்ச்சி, கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது ஹாலித் தலை மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அடிக்கல் நாட்டினர். அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறை கள்படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரை தளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடுக்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன. பல்லாயிரக்கண க்கானோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா  முருகனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.