districts

தஞ்சாவூர்- கும்பகோணம் இடையே புதிய பேருந்து இயக்கம்

கும்பகோணம், மே 21-

    தஞ்சாவூரிலிருந்து கிராமங்கள் வழியே கும்பகோணத்திற்கு புதிய பேருந்து இயக்கப்படுகிறது.  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் இந்தப் பேருந்து  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், திட்டை, திருக் கருகாவூர், பட்டீஸ்வரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (கும்ப கோணம்), கொற்கை, கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி வழி யாக கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடைகிறது.

    புதிய பேருந்தை கொற்கையிலிருந்து  மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்.  நிகழ்விற்கு ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே.முத்து செல்வம், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் பொது மேலாளர் ஜெ.ஜெபராஜ் நவமணி, உதவி மேலா ளர் (தொழில்நுட்பம்) ஏ.தமிழ்செல்வன் , கோட்ட மேலாளர். ஜெ.பால முருகன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   454B எண் கொண்ட இந்தப் பேருந்து  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 9-35 மணிக்கு புறப்படும்; மதியம் 1-45 மணி; மற்றும் மாலை 6 மணிக்கும், கும்பகோணத்தில் இருந்து காலை  7-30 மணிக்கும்; காலை 11-50; மாலை 4 மணி மற்றும் இரவு 8-30 மணி- க்கும் புறப்படும்.