districts

img

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகே தொடரும் போக்குவரத்து நெருக்கடி

திருச்சிராப்பள்ளி,  மே 16-

    திருச்சிராப்பள்ளியில்  ரயில்நிலைய சந்திப்புப் பகுதியில் கட்டுப்பாடற்ற போக்குவரத்தால், அடிக்கடி  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டி கள் மற்றும் சாலையில் செல்வோர் கடும் அவதிக் குள்ளாகின்றனர்.

    பாரதியார் சாலையில் ரயில்வே ஜங்ஷன் அருகே அமைந்துள்ள பாரதியார் சால சால ரவுண்டானா நகரின் பல்வேறு பகுதி களுக்குச் செல்லும் பயணி களின் முக்கியச் சந்திப்பா கும். பேருந்துகள், லாரிகள்,  கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து  வகையான வாகனங்களும் சந்திப்பில் குறுக்கும் நெடுக் குமாக செல்ல முயல்கின்றன. இதனால் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மதுரை பிரதான சாலை யிலிருந்து பாரதியார் சாலைக்கு செல்லும் வாகன  ஓட்டிகள்  ரவுண்டானாவை கடக்க மிகவும் சிரமப்படு கின்றனர். இதேபோல், ராக்கின் சாலை வழியாக மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளும் சிரமப்படுகின்றனர். குறிப் பாக ரயில்நிலையத்திற்கு ரயில்கள் வந்தவுடன் அங்கி ருந்து வரும் வாகனங்கள், மக்கள் அதிகளவில் வரும் நேரங்களில் போக்குவரத்து பெரும் பிரச்சனையாக உள்ளது.

    போக்குவரத்தை ஒழுங் குபடுத்த காவல்துறையினர் இல்லாததால், நான்கு முக்கிய சாலைகளை இணைக்கும் இந்தச் சந்திப்பு திக்கித் திணறுகிறது. விபத் துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை  சீர் செய்யவும் ரவுண்டானா வில் நான்கு இடங்களில் போக்குவரத்து சிக்னல் களை காவல்துறை அமைத் திருந்தாலும், பல மாதங் களாக சிக்னல்கள் பழுத டைந்து உள்ளதாக சாலை பயன்பாட்டாளர்கள் தெரி விக்கின்றனர்.