மயிலாடுதுறை ஏப்.4- மயிலாடுதுறை மாவட்டம் ,பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொறையார் அருகேயுள்ள மாணிக்கபங்கு ஊராட்சி ஆணைக்கோவில் கிராமத்தில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்புல் புதிய அங்காடிக் கட்டடம், திருக்களாச்சேரி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதீப்பில் பேருந்து பயணிகள் நிழற் குடை, இலுப்பூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பில் பேருந்து பயணிகள் நிழற்குடை, காட்டுச்சேரி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் வளர்ச்சி நிதி ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தள நீர் தேக்க தொட்டி என மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா அந்தந்த பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு செம்பனார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் புதிய கட்டடங்களைத் திறந்துவைத் தார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் ராபியா நர்கிஸ்பானு அப்துல் மாலிக், துளசி ரேகா, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் மைனர்பாஸ்கர், மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஞான வேலன், செம்பனார்கோவில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அப்துல் மாலிக்,அன்பழகன், அமிர்த விஜயகுமார், ஊராட்சி மன்றத் தலை வர்கள் விஜயலட்சுமி, சம்சாத் ரபீக், மோகன், ரவி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்ட னர்.