புதுக்கோட்டை, மே 15-
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரண்டு சிறுமிகள், அவரது சித்தப்பா என மூன்று பேர் ஊரணியில் மூழ்கி உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு அட்சயா (15), தனலட்சுமி (12), பூமிகா (10) என மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஆலங் குடி அருகே பள்ளத்தி விடுதி தெற்குபட்டியில் உள்ள இவர்களது குல தெய்வ கோயில் கிடா வெட்டு பூஜையை முன் னிட்டு விஜயகாந்த் அவ ரது மனைவி விஜயா விஜயகாந்தின் சகோதர ரான ஊட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (29), விஜயகாந்தின் மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு பேர் திங்கள்கிழமை பள்ளத்திவிடுதிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் கோயில் ஊர ணியில் சிறுமிகள் அட்ச யா(15), தனலட்சுமி(12) ஆகிய இருவர் குளித்த நிலையில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர்.
சிறுமிகளின் சித்தப்பா வான ஊட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (29) சிறுமிகளை மீட்க முயன்ற நிலையில் அவ ரும் நீரில் மூழ்கியுள்ளார். நீரில் மூழ்கிய மூன்று பேரும் சடலங்கலாக மீட்கப்பட்டு உடல் கூறு ஆய்வுக்காக புதுக் கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.