districts

img

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், செப்.9 -  தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், போஷான் அபியான் திட்டத்தின்கீழ்  தேசிய ஊட்டச்சத்து மாத விழா 2023 விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தீபக்  ஜேக்கப் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத் தார். இந்த விழிப்புணர்வு பேரணி, ரயில்  நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா நூற் றாண்டு மண்டபம் வரை சென்றடைந்தது. தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட திட்ட அலுவலர் கை. ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.