districts

img

தேசிய அளவிலான பாக்ஸிங் சாம்பியன் போட்டி திருவாரூர் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

திருத்துறைப்பூண்டி, ஜன.25 -  திருவாரூர் மாவட்டம் சார்பில் பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான 11 ஆவது பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் வெற்றி பெற்று ஒரு தங்க பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம், இரண்டு வெண்கல பதக்கம் வென்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். திருத்துறைப்பூண்டி, திருவா ரூர், நாகப்பட்டினம் மாவட்ட ஹப்- ஹிடோ அசோசியேசன் மற்றும் முத்தூஸ் கராத்தே கோபுடோ தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர் கள் பாண்டிச்சேரியில் நடந்த தேசிய  அளவிலான 11 ஆவது ஹப்ஹிடோ (பாக்ஸிங்) சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் திருவாரூர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதில் ஜெய்ஸ்ரீராம் 1 தங்கம், 1  வெண்கல பதக்கமும், லெட்சுமி நாராயணன் 2 வெள்ளி பதக்கமும், பிரசாந்த் மாதவ் 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். சாதனை  படைத்த மாணவர்களை இந்திய  தலைமை பயிற்சியாளர் முத்துக்கும ரன் மற்றும் பயிற்சியாளர்கள், மாண வர்கள் பாராட்டினர்.