districts

img

ஜி20 மாநாட்டில் இடம்பெறும் நடராஜர் சிலை சுவாமிமலையில் இருந்து அனுப்பி வைப்பு

கும்பகோணம், ஆக.27-

       ரூ.10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடரா ஜர் சிலை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை யிலிருந்து, கனரக வாகனம் மூலம் ஜி20 மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     தில்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டு அரங்கின் அருகே, நடராஜர் சிலையை  பிரம்மாண்டமாக அமைக்க திட்ட மிடப்பட்டு, அதற்கான சிலை சுவாமிமலை யில் செய்யப்பட்டது.

     அச்சிலை, 8 மூலப்பொருட்களான தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாத ரசம், இரும்பு, ஜிங் ஆகிய கலவையுடன், நுட்பமான கலைநயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. 19 டன் எடையில் உருவாக்கப் பட்டுள்ள இச்சிலை, 28 அடி உயரம் கொண் டது. மேலும் இந்த சிலை, உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை எனக் கூறப்படு கிறது.  

    இந்த சிலை சோழர்கால நடராஜர் சிலை  போன்று வெண்கலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இச்சிலையை சுவாமிமலையைச் சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதி யின் மகன்களான ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதா கிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் சுவாமிநாதன் சுவாதி ஆகிய மூவரும் சேர்ந்து வடிவமைத் துள்ளனர். மேலும் அவர்களுடன் சிலை வடி வமைப்பு பணியில் சதாசிவம், கௌரி சங்கர், சந்தோஷ்குமார், ராகவன் உள்ளிட் டோர் ஈடுபட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10  கோடி.

    இந்த நடராஜர் சிலை, ஜி20 மாநாடு நடை பெற உள்ள தில்லி பிரகதி மைதானத்தில்  இடம்பெற உள்ளது. சுவாமிமலையில் இருந்து புறப்பட்ட நடராஜர் சிலை, உளுந்தூர் பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழி யாக கர்நாடகாவை சென்றடைந்து, அதன் பிறகு ஒசக்கோட்டை, தேவனஹள்ளி, கர்னூல்,  அலகாபாத், நாக்பூர், சியோனி, சாகர், லலித் பூர், குவாலியர் மற்றும் ஆக்ரா வழியாக தில்லி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கும்பகோணம் சரவணன்